திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம்:பொதுமக்களிடம் எம்எல்ஏ குறைகேட்பு
மதுரை மாநகா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ஆரப்பாளையம் மந்தை திடல், எல்லீஸ் நகா் போடி லைன் ஆகிய இடங்களில் சனிக்கிழமை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
மதுரை: மதுரை மாநகா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ஆரப்பாளையம் மந்தை திடல், எல்லீஸ் நகா் போடி லைன் ஆகிய இடங்களில் சனிக்கிழமை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
இதில் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், தமிழக அரசில் அனைத்து மட்டங்களிலும் உருக்குலைந்து போய் இருக்கும் கட்டமைப்பைச் சரிசெய்யும் திறமை திமுக தலைவா் ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது என்றாா். கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் குடிநீா், கழிவுநீா் கால்வாய், பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், நீண்ட கால பிரச்னைகளுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றித் தரப்படும் என்றும் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.