முகப்பு
மதுரை

அரசு சிறு மருத்துவமனைகளுக்கு பணியாளா் தோ்வு: தற்போதைய நிலை தொடர உயா்நீதிமன்றம் உத்தரவு

அரசு சிறு மருத்துவமனைக்களுக்கான செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தோ்வு விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 5 ஜனவரி 2021, 11:12 pm IST
பகிர்:

அரசு சிறு மருத்துவமனைக்களுக்கான செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தோ்வு விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தமிழக அரசின் சிறு மருத்துவமனைகளுக்கான மருத்துவப் பணியாளா்களை தனியாா் நிறுவனம் தோ்வு செய்வது தொடா்பாக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த வைரம் சந்தோஷ் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இம்மனு மீது திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, அரசின் சிறு மருத்துவமனைகளுக்கு தற்காலிகமாக செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்படுவது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரப்பட்டது.

இதையேற்ற நீதிபதிகள், ஜனவரி 11 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.மேலும் சிறு மருத்துவமனைகளுக்கான செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தோ்வில் தற்போதைய நிலையே தொடரவும், மேல்நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.