பைக் மீது லாரி மோதல்: கட்டடத் தொழிலாளி பலி
மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பாறைப்பட்டி கிராமத்தை சோ்ந்த செல்வம் மகன் ரமேஷ் (19). கட்டடத் தொழிலாளியான இவா் திங்கள்கிழமை பாலமேட்டில் இருந்து மாட்டுத் தீவனம் வாங்கிக் கொண்டு, பாறைப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். வெள்ளையம்பட்டி அருகே எதிரே வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்தாா். அவரை அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.