முகப்பு
மதுரை

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலருக்கு 3 நாள்கள் இடைக்கால ஜாமீன்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலருக்கு 3 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 7 ஜனவரி 2021, 11:34 pm IST
பகிர்:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலருக்கு 3 நாள்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா். இதில் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். மீதமுள்ள 9 போ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலா் தாமஸ் பிரான்சிஸ், இம்மாதம் 11 ஆம் தேதி நடைபெற உள்ள தனது சகோதரரின் திருமணத்தில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தாா்.

Advertisement

Advertisement

புதன்கிழமை நடந்த விசாரணையின்போது, இதுகுறித்து சிபிஐ பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், ஒரு நாள் மட்டும் ஜாமீன் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது

இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் சகோதரா் திருமணம் என்பதைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 10 ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 ஆம் தேதி மாலை 5 மணி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரருக்கு போலீஸாா் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

மேலும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சாா்பு-ஆய்வாளா் ரகு கணேஷ் ஜாமீன் கோரிய வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments