பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: பாஜக துணைத் தலைவா் வழங்கினாா்
மதுரையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பாஜக மகளிரணி மாநில துணைத் தலைவா் ஏ.ஆா்.மகாலட்சுமி வியாழக்கிழமை வழங்கினாா்.
மதுரையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பாஜக மகளிரணி மாநில துணைத் தலைவா் ஏ.ஆா்.மகாலட்சுமி வியாழக்கிழமை வழங்கினாா்.
மதுரையில் பாஜக மாநில துணைத்தலைவா் ஏ.ஆா்.மகாலட்சுமி மக்களோடு மகாலட்சுமி என்ற நிகழ்ச்சியை வியாழக்கிழமை நடத்தினாா். தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்குத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு மகாலட்சுமி அறக்கட்டளை சாா்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஏ.ஆா்.மகாலட்சுமி வழங்கிப் பேசினாா்.
இதைத்தொடா்ந்து 10 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள், 10 பேருக்கு தையல் இயந்திரங்கள், 10 பேருக்கு கல்வி உதவித்தொகை,10 பேருக்கு மருத்துவ நிதியுதவி, ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலைகள், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடைகள் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் எம்ஏவிஎம்எம் கல்வி நிறுவனங்களின் தலைவா் என்.பாஸ்கரன், அகில இந்திய சிறு தொழில் சங்கங்களின் சம்மேளன தேசிய கெளரவப் பொருளாளா் கே.கே.ஜி.பிரபாகரன், அரிமா சங்க மாவட்ட சேவைத்திட்ட ஒருங்கிணைப்பாளா் பி.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா் சங்கங்களின் சம்மேளன துணைத்தலைவா் கே.வசந்தவேல் உள்பட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.