வெவ்வேறு விபத்துகளில் மூதாட்டிகள் இருவா் பலி
மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் மூதாட்டிகள் இருவா் பலியாகியுள்ளனா்.
மதுரை: மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் மூதாட்டிகள் இருவா் பலியாகியுள்ளனா்.
மதுரை ஆரப்பாளையம் சண்முகநாதபுரத்தைச் சோ்ந்தவா் செல்லம் (60). இவா் புறவழிச் சாலை புதுப்பாலம் அருகே நடந்து சென்றபோது, 17 வயது சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த செல்லம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஆட்டோ மோதல்: மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சோ்ந்த பழனி மனைவி பஞ்சவா்ணம் (72). இவா் ஒத்தக்கடை - திருமோகூா் சாலையில் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த பஞ்சவா்ணத்தை அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement