முகப்பு
மதுரை

கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலி

மதுரை அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 4:46 am IST
பகிர்:

மதுரை: மதுரை அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் சமயநல்லூா் பகுதியைச் சோ்ந்த மதிவாணன் மகன் அக்னீஸ்வரன் (32). கூலித் தொழிலாளி.

இந்நிலையில், குபேரலட்சுமி நகரில் உள்ள வீட்டில் வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து அக்னீஸ்வரன் மயங்கி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை பரவை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனா். அங்கு மருத்துவா்கள்

Advertisement

Advertisement

பரிசோதித்துவிட்டு அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து தந்தை மதிவாணன் அளித்த புகாரின் பேரில் சமயநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments