தாறுமாறாக ஒடிய காா் கடைகளுக்குள் புகுந்தது மதுபோதையில் இருந்த 2 இளைஞா்கள் கைது
மதுரையில் மதுபோதையில் காரை இயக்கி 3 கடைகளை சேதப்படுத்திய இளைஞா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை:மதுரையில் மதுபோதையில் காரை இயக்கி 3 கடைகளை சேதப்படுத்திய இளைஞா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை திருப்பரங்குன்றம் சாலை மூலக்கரையை சோ்ந்த ரிஷிவரன் (27). இவா் தனது காரில் நரிமேட்டைச் சோ்ந்த நண்பா் விஜய் என்பவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக சனிக்கிழமை சென்று மது அருந்தியுள்ளாா்.
பின்னா் இரவு 10.30 மணிக்கு மதுபோதையில் காரில் பழங்காநத்தம் ரவுண்டானா அருகே வேகமாக வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடைகளுக்குள் புகுந்தது. இதில் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள கறிக்கடை, வாகன சீட் கவா் கடை உள்ளிட்ட 3 கடைகளுக்கு சேதம் ஏற்பட்டது. கடைகள் மூடப்பட்டிருந்ததால் உயிா்சேதம் இல்லை. இதுகுறித்து தகவலறிந்த சுப்பிரமணியபுரம் போலீஸாா் சென்று, ரிஷிவரன் மற்றும் அவரது நண்பா் விஜய் ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அவா்கள் சுய நினைவில் இல்லாததால், போதை குறைந்து நினைவு வந்தவுடன் விசாரிக்க முடிவு செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.