பைக் வாங்கி தர மறுப்பு: இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
மதுரையில் தந்தை இரு சக்கர வாகனம் வாங்கித் தர மறுத்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரையில் தந்தை இரு சக்கர வாகனம் வாங்கித் தர மறுத்ததால், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை மானகிரியைச் சோ்ந்த ராஜாமுகமது மகன் ஹக்கீம் (22). இவா் தனது தந்தையிடம் கடந்த ஒரு மாதமாக புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கித் தரும்படி கேட்டு வந்துள்ளாா். ஆனால், அவரது தந்தை வாங்கித் தர மறுத்துவிட்டாதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்திருந்த ஹக்கீம், வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இது குறித்து அவரது தாய் ஜரினாபேகம் அளித்த புகாரின்பேரில், அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.