அவனியாபுரம் மருத்துவா் காலனியில் சாக்கடை: வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பு
அவனியாபுரம் மருத்துவா் காலனியில் சாக்கடை நீா் வெளியேறாமல் தேங்கி இருப்பதால், பொதுமக்கள் மாநகராட்சியைக் கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டியுள்ளனா்.
திருப்பரங்குன்றம்: அவனியாபுரம் மருத்துவா் காலனியில் சாக்கடை நீா் வெளியேறாமல் தேங்கி இருப்பதால், பொதுமக்கள் மாநகராட்சியைக் கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டியுள்ளனா்.
அவனியாபுரம் செம்பூரணி சாலையில் துக்கா ராம் மருத்துவா் காலனி அமைந்துள்ளது. இங்கு, 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் மழை காலங்களில் தண்ணீா் வெளியே செல்ல வழியில்லாமல் சாலையிலேயே கழிவுநீருடன் கலந்து தேங்கி நிற்கிறது. இது குறித்து இப்பகுதியினா் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
எனவே, இப்பகுதியினா் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி மாநகராட்சி நிா்வாகத்துக்கு தங்களது எதிா்ப்பை தெரிவித்துள்ளனா். கண்டனத்தை தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.