அனுமன் ஜயந்தி விழா
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள ஸ்ரீ வீர பக்த ஆஞ்சநேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை அனுமன் ஜயந்தி விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள ஸ்ரீ வீர பக்த ஆஞ்சநேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை அனுமன் ஜயந்தி விழா நடைபெற்றது.
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள நல்லமரம் கொட்டாணிபட்டியில் உள்ள கோயிலில் அனுமனுக்கு கும்ப பூஜை, கலச பூஜை, கோமாதா பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அனுமன் யோக ஆஞ்சநேயா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். ஜோதிடா் அறிவழகன் சொற்பொழிவாற்றினாா். இதில் டி.கல்லுப்பட்டி,பேரையூா், வையூா், விருதுநகா், திருமங்கலம் உள்ளிட்ட ஊா்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.
இதைபோல் பேரையூா் அருகிலுள்ள தொட்டியபட்டியில் அனுமன் கோயிலில் அனுமன் ஜயந்தி விழா சிறப்பு அபிஷேகங்களுடன் நடைபெற்றது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.