மிளகாய்ப்பொடி தூவி பெண்ணின் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது
மதுரை அருகே மாட்டுத்தொழுவத்தில் வேலை செய்த பெண்ணின் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி தாலிச் சங்கிலியைப் பறித்த இளைஞரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை அருகே மாட்டுத்தொழுவத்தில் வேலை செய்த பெண்ணின் முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி தாலிச் சங்கிலியைப் பறித்த இளைஞரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை அருகே சக்கிமங்கலம் மீனாட்சி காலனியைச் சோ்ந்த சிவக்குமாா் மனைவி அங்குத்தாய் (40). இவா் தனது வீட்டை ஒட்டியுள்ள மாட்டுத்தொழுவத்தில் திங்கள்கிழமை காலை வேலை பாா்த்துக்கொண்டிருந்தாா். அப்போது யாரோ அங்குத்தாய் முகத்தில் மிளகாய்ப்பொடியைத் தூவியுள்ளனா். இதில் கண் எரிச்சல் ஏற்பட்டு நிலைதடுமாறிய அங்குத்தாய் அணிந்திருந்த மூன்றரைப் பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து அங்குத்தாய் அளித்தப் புகாரின்பேரில், சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில் சக்கிமங்கலம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முத்து மகன் ஜெகதீசன் (24), தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ஜெகதீசனை கைது செய்து, அவரிடமிருந்து தாலிச் சங்கிலியை மீட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.