திருப்பரங்குன்றம் தென்பழஞ்சியில் பொங்கல் விழா கொண்டாடிய ராகுல் காந்தி
திருப்பரங்குன்றத்தை அடுத்த தென்பழஞ்சியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த தென்பழஞ்சியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.
புதுதில்லியில் இருந்து அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பதற்காக புதுதில்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை 11:45 மணி அளவில் தனி விமானம் மூலம் மதுரை வந்தார்.
தொடர்ந்து அவர் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து தென்பழஞ்சி கிராம மக்கள் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். பின் கிராம மக்களுடன் பொங்கல் உணவருந்திய ராகுல்காந்தி பின் புறப்பட்டு சென்றார்.
Advertisement
Advertisement
முன்னதாக ராகுல்காந்திக்கு விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் கிராம மக்கள் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய வழக்கப்படி உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து தென்பழஞ்சி இருந்து கார் மூலம் 2.30 மணிக்கு விமான நிலையம் வந்த அவர் 2.40 மணிக்கு தனி விமானத்தில் புது தில்லி புறப்பட்டுச் சென்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.