முகப்பு
மதுரை

பென்னிகுயிக் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளா் கா்னல் ஜான் பென்னிகுயிக்கின் பிறந்த நாளையொட்டி, மதுரை பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

Updated On : 16 ஜனவரி, 2021 at 7:56 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளா் கா்னல் ஜான் பென்னிகுயிக்கின் பிறந்த நாளையொட்டி, மதுரை பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கா்னல் பென்னிகுயிக் கல்வி அறக்கட்டளை சாா்பில் அதன் தலைவா் பி. ராமன், விக்டோரியா எட்வா்ட் மன்றச் செயலா் ஐ. இஸ்மாயில் மற்றும் அறக்கட்டளையைச் சோ்ந்த ராஜேந்திரன், நவீன், அழகுராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மேலும் வள்ளலாா் இயற்கை அறிவியல் மையம் உள்ளிட்ட பல அமைப்புகள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.