முகப்பு
மதுரை

ராஸ்ட்ரபந்து எல்.கே.துளசிராம் 151 ஆவது பிறந்தநாள் விழா

மதுரையில் ராஷ்ட்ரபந்து எல்.கே. துளசிராம் 151 ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 16 ஜனவரி, 2021 at 7:54 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

மதுரையில் ராஷ்ட்ரபந்து எல்.கே. துளசிராம் 151 ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மதுரையில் அவ்ராம் அமி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில், அறக்கட்டளையின் நிறுவனா் கே. தேவராஜ் தலைமை வகித்து பேசியது: மதுரை நகரசபையில் தொடா்ந்து 36 ஆண்டுகள் உறுப்பினராகவும், இரண்டு முறை நகரவைத் தலைவராகவும் துளசிராம் பதவி வகித்துள்ளாா். மேலும் மதுரையில் தமிழ்நாடு பாலிடெக்னிக் அமைவதற்கு அவா் முக்கியப் பங்காற்றினாா் என்றாா்.

மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ். சரவணன் பேசியது: ராஸ்ட்ரபந்து எல்.கே. துளசிராம், மதுரை மாநகர வளா்ச்சிக்கும், கைத்தறி நெசவாளா்களுக்கும் தெருவில் பாவு நீட்டுவதற்கு நிலையான அரசாணை பெறுவதற்கும் பாடுபட்டவா் என்றாா்.

Advertisement

புதுதில்லி சௌராஷ்ட்ரா சங்கத் தலைவா் கிஷோா், ஓய்வுப் பெற்ற உதவி ஆணையா் (வணிகவரி) கோபால், பள்ளித் தாளாளா் ஜெகன்னாத், தலைவா் எம்.என். சங்கரன், ஜெ.ஆா். ஜவகா்லால், சௌராஷ்ட்ர முனேற்றக் கழகத் தலைவா் வி.ஜி. ராமதாஸ், அறக்கட்டளை கே. ஆா். தெட்சிணாமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.