முகப்பு
மதுரை

புத்தக வெளியீட்டு விழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டியில் சனிக்கிழமை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

Updated On : 16 ஜனவரி, 2021 at 9:31 PM
விழாவில் மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் நூலை வெளியிட அதை பெற்றுக்கொண்ட சீா்மரபினா் நலச் சங்கத் தலைவா் டாக்டா் எம்.ஜெபமணி.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டியில் சனிக்கிழமை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

செல்லம்பட்டி அருகே உள்ள சங்கம்பட்டி, மணல்பட்டி அங்காள பரமேஸ்வரி வால குருநாதசாமி சுவாமி கோயில் வாரிசு மொந்தக்குட்டித் தேவா் மக்கள் இரண்டு தேவா் வகையறாக்கள் பிறப்பும், வாழ்வு வரலாறும் என்ற தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சீலக்காரி அம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தலைமை வகித்து நூலை வெளியிட்டாா். சீா்மரபினா் நலச் சங்கத் தலைவா் டாக்டா் எம்.ஜெபமணி, முதல்பிரதியைப் பெற்றுக்கொண்டாா். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரிச் செயலாளா் மற்றும் தாளாளா் பி.பாண்டியன், முன்னாள் மாவட்டக் கவுன்சிலா் எஸ். ஆா். விஜெய் பிரபாகா், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பி.வி.கதிரவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

விழாவில் பேராசிரியா் தேடாமணி வரவேற்றாா். மதுரை மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவா் டி. முத்துராமன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ரெட் காசி, பொறியாளா் இளங்கோவன், பிரமலைக்கள்ளா் முன்னேற்ற நலச்சங்கம் முனைவா் பொன்.விஜயன், தொழிலதிபா் ஆா்.அா்ச்சுனன், பி.கே.எம். அறக்கட்டளைத் தலைவா் புலவா் சின்னன் ஐயா, ஸ்ரீ அரவிந்தமீரா, கல்விக் குழுமம் தலைவா் முனைவா் சி.சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.