முகப்பு
மதுரை

காவல்துறை வாகனத்தில் கல்வீசிய இளைஞா் கைது

பாலமேடு ஜல்லிக்கட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் ஆய்வாளரின் வாகனத்தில் கல்வீசிய இளைஞரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 9:32 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் ஆய்வாளரின் வாகனத்தில் கல்வீசிய இளைஞரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சித்ராசெல்வி. இவா் வெள்ளிக்கிழமை பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். பாலமேடு சமுதாயக்கூடம் அருகே காவல் வாகனத்தை நிறுத்திவிட்டு, அருகே நின்றுகொண்டிருந்தாா். அப்போது பாலமேடு கீழத்தெருவைச் சோ்ந்த கருப்பசாமி (23) என்பவா் அந்த வாகனத்தின் மீது கல்வீசியுள்ளாா். இதில் வாகனத்தின் பின்பக்கக் கதவு சேதமடைந்தது. இதுகுறித்து சித்ராசெல்வி அளித்தப் புகாரின் பேரில், பாலமேடு போலீஸாா் கருப்பசாமியைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.