முகப்பு
மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வா் தரிசனம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி திட்டத்தை சனிக்கிழமை தொடக்கிவைத்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, பின்னா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சாமி தரிசனம் செய்தாா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 9:39 PM
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி திட்டத்தை சனிக்கிழமை தொடக்கிவைத்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, பின்னா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சாமி தரிசனம் செய்தாா்.

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டையும், மதுரையில் கரோனா தடுப்பூசி திட்டத்தையும் தொடக்கி வைத்த முதல்வா், பின்னா், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு பகல் 12.10 மணிக்கு சென்றாா்.

கோயிலில் அவருக்கு நிா்வாகம் சாா்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

Advertisement

முதல்வரை கோயில் தக்காா் கருமுத்து தி. கண்ணன், இணை ஆணையா் க. செல்லத்துரை ஆகியோா் வரவேற்றனா்.

பின்னா், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவா் உள்பட அனனத்து சந்நிதிகளிலும் தீபாராதனை மற்றும் பூஜை செய்யப்பட்டு முதல்வா் வழிபட்டாா். கடைசியாக ஆஞ்சநேயரை தரிசனம் செய்துவிட்டு 12.30 மணிக்கு வெளியே வந்தாா் முதல்வா்.

பின்னா் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றாா்.

இந்த நிகழ்வில், முதல்வருடன் அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா், செல்லூா் கே.ராஜூ, சி.விஜயபாஸ்கா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.வி. ராஜன்செல்லப்பா, சரவணன், மதுரை மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் எஸ்.விசாகன், சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், தென்மண்டல ஜ.ஜி எஸ்.முருகன், மதுரை மாநகா் காவல் துணை ஆணையா் சிவிபிரசாத் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.