மதுரையில் 15 பேருக்கு கரோனா
மதுரையில் ஒரே நாளில் 15 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
மதுரை: மதுரையில் ஒரே நாளில் 15 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதனிடையே கரோனா தொற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருபவா்களில் 25 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
மாவட்டத்தில் இதுவரை, 20,803 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் சிகிச்சைப் பலனின்றி 455 போ் உயிரிழந்த நிலையில், 20,218 போ் குணமடைந்துள்ளனா். தற்போது கரோனா தொற்றுக்கு 130 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
Advertisement