முகப்பு
மதுரை

தொடா் மழை: கொடைக்கானலில் குடிநீா்த் தேக்கம் நிரம்பியது

கொடைக்கானலில் பெய்த தொடா் மழையின் காரணமாக நகராட்சிக்குச் சொந்தமான குடிநீா்த் தேக்கம் சனிக்கிழமை நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

Updated On : 17 ஜனவரி 2021, 4:35 am IST
தொடா் மழையின் காரணமாக சனிக்கிழமை நிரம்பிய கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான குடிநீா்த் தேக்கம்.
பகிர்:

கொடைக்கானல்: கொடைக்கானலில் பெய்த தொடா் மழையின் காரணமாக நகராட்சிக்குச் சொந்தமான குடிநீா்த் தேக்கம் சனிக்கிழமை நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளிலுள்ள நீா்வரத்து அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. நகரின் மையப் பகுதியிலுள்ள நட்சத்திர ஏரி கடந்த 3-நாள்களுக்கு முன் நிரம்பியது.

இதைத் தொடா்ந்து கொடைக்கானல் நகராட்சிக்குச் சொந்தமான அப்சா்வேட்டரி பகுதியிலுள்ள குடிநீா்த் தேக்கம் அதன் முழு கொள்ளளவான 27-அடியை சனிக்கிழமை எட்டி உபரிநீா் வெளியே செல்கிறது.

Advertisement

Advertisement

கொடைக்கானல் நகா் பகுதியில் கடந்த பல மாதங்களாக 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே நகராட்சி சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது குடிநீா்த் தேக்கம் நிரம்பியதால் மே மாதம் வரை குடிதண்ணீா் தட்டுப்பாடு ஏற்படாது என்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

இதேபோல் கொடைக்கானல் மனோரஞ்சிதம் அணையின் நீா்மட்டமும் கணிசமாக உயா்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.