முகப்பு
மகளிர்மணி

முட்டையை பல வடிவங்களில் சமைக்க எக் போச்சர்

முட்டையை நாம் பல விதங்களாக சமைக்கலாம். வேக வைப்பது, ஆம்லெட் போடுவது, அரை வேக்காடு எனப்படும் ஹால்ப் பாயில், குழம்பு வைப்பது, பொறியல்களில் உடைத்து ஊற்றி சேர்ப்பது போன்று பல வகைகளில் நாம் சமையலில் பயன்படுத்துகிறோம்.

Updated On : 11 ஜூன் 2013, 5:33 pm IST
பகிர்:

முட்டையை நாம் பல விதங்களாக சமைக்கலாம். வேக வைப்பது, ஆம்லெட் போடுவது, அரை வேக்காடு எனப்படும் ஹால்ப் பாயில், குழம்பு வைப்பது, பொறியல்களில் உடைத்து ஊற்றி சேர்ப்பது போன்று பல வகைகளில் நாம் சமையலில் பயன்படுத்துகிறோம்.

அதில் புது விதமாக சமைக்க வந்திருப்பதுதான் எக் போச்சர். அதாவது, அந்த காலத்தில், பச்சிளம் குழந்தைகளுக்கு முட்டையை உடைத்து ஒரு கிண்ணம் அல்லது டம்ளரில் ஊற்றி அதனை அரைவேக்காடாக வேக வைத்து தளதளவென்று வரும் போது எடுத்து ஆற வைத்து ஊட்டுவார்கள். அதை பலரும் தற்போது மறந்தே போயிருப்பார்கள்.

ஆனால், சிலருக்கு ஆல்ப் பாயில் என்றால் பிடிக்கும். ஆனால் எண்ணெய் ஊற்றாமல் சாப்பிட வேண்டும் என்றால், அதற்கு உதவுவதுதான் எக் போச்சர். அதாவது சிலிக்கானில் பல்வேறு வடிவங்களில் வந்துள்ளன இந்த எக் போச்சர்கள். இதில் முட்டையை உடைத்து ஊற்றி அதனை தண்ணீர் நிறைந்த பாத்திரத்தில் வைத்து அடுப்பில் வைக்க வேண்டும். முட்டை நமக்குத் தேவையான பதத்தில் வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளலாம். இந்த முட்டையை குழந்தைகளுக்கு உண்ணக் கொடுப்பதும் எளிது, சமையலில் பயன்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும்.

Advertisement

Advertisement

இந்த முறையில் பூ போலவும், வட்ட வடிவிலும் முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளலாம். பல வடிவங்களில் வந்திருப்பது இதன் சிறப்பாகும்.

எக் டைமர், எக் போச்சர், எக் போச்சரை எடுக்க உதவும் ஸ்பூன் போன்றவை சில இடங்களில் ஒன்றாக விற்கப்படுகிறது. விலையும் குறைவுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments