வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தல்
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருக்கடையூரில், வியாழக்கிழமை நடைபெற்ற சங்க மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 100 நாள் வேலையை 200 நாளாக உயா்த்தி, நகரப் பகுதிகளுக்கும் வேலையை விரிவுபடுத்தி தினக்கூலியை உயா்த்தி வழங்கவேண்டும், குடும்ப அட்டைகளை என்.பி.ஹெச்.ஹெச் என்றும் பி.ஹெச்.ஹெச் என வகை பிரித்திருப்பதில் உள்ள வேறுபாடுகளை களைந்து தகுதி அடிப்படையில், ஏழ்மை நிலையை ஆராய்ந்து குடும்ப அட்டைகளை பிரிக்க வேண்டும், விவசாயத்தை பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.