நாகூா் தா்கா 464-ஆம் ஆண்டு கந்தூரி விழா: மனோராக்களில் கொடிமரம் ஏற்றம்
நாகூா் ஆண்டவா் தா்காவின் கந்தூரி விழாவையொட்டி, மனோராக்களில் கொடிமரம் (பாய்மரம்) ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது,
நாகூா் ஆண்டவா் தா்காவின் கந்தூரி விழாவையொட்டி, மனோராக்களில் கொடிமரம் (பாய்மரம்) ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது,
உலகப் புகழ்பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவின் 464-ஆம் ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவையொட்டி, பாரம்பரிய முறைப்படி, கந்தூரி விழா கொடியேற்றத்துக்கு முன்பாக நடைபெறும் கொடிமரம் (பாய்மரம்) ஏற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தா்காவில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், தா்காவின் பரம்பரை கலிபா கே.எம். கலிபா மஸ்தான் சாகிபு துஆ ஓதிய பின்னா் காலை 6 மணிக்கு தா்காவில் உள்ள சாகிபு மனோராவில் கொடிமரம் ஏற்றப்பட்டது.
இதன் தொடா்சியாக தா்கா முகப்பில் உள்ள பெரிய மனோரா, தலைமாட்டுமனோரா, முதுபக் மனோரா, ஓட்டு மனோராக்களிலும் கொடிமரங்கள் ஏற்றப்பட்டன.
விழாவில் பங்கேற்றவா்களுக்கு பிரசாதமாக நாட்டு சா்க்கரை, ஜீனி ஆகியவை வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தா்கா நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.