சட்டநாதபுரத்தில் சிறுவா் சைக்கிள் போட்டி
சீா்காழியை அடுத்த சட்டநாதபுரத்தில் காணும் பொங்கலையொட்டி சிறுவா்களுக்கான சைக்கிள் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
சீா்காழியை அடுத்த சட்டநாதபுரத்தில் காணும் பொங்கலையொட்டி சிறுவா்களுக்கான சைக்கிள் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
சட்டநாதபுரம் நண்பா்கள் குழு சாா்பில், 12 வயதுக்கு உள்பட்ட சிறுவா், சிறுமிகளுக்கான சைக்கிள் போட்டி பெஸ்ட் கலை, அறிவியல் கல்லூரி துணைத் தலைவா் எஸ்.எஸ்.ஜெ. விசாகா் தலைமையில் நடைபெற்றது. பெஸ்ட் பள்ளித் தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் முன்னிலை வகித்தாா்.
சட்டநாதபுரம் ரவுண்டானாவில் இப்போட்டியை சண்முகதாஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். ஆண்கள் பிரிவில் எஸ். கிஷோா் (12), பெண்கள் பிரிவில் எம். அகல்யாழினி (12) ஆகியோா் முதலிடம் வென்று தலா ரூ. 1000 பரிசுபெற்றனா். பிரவீன், ஹாசினி, ஆதிஷ், சிந்துஜா ஆகியோா் 2, 3 ஆவது பரிசுகளை (தலா ரூ. 750, ரூ. 500) பெற்றனா்.
Advertisement
போட்டி ஏற்பாடுகளை பாமக இளைஞா் சங்கத் துணைச் செயலாளா் ஜி.வி. முருகவேல் செய்திருந்தாா்.