ராசிபுரம் எஸ்ஆர்வி ஆண்கள் பள்ளி சிறப்பிடம்
பிளஸ் 2 பொதுத் தேர்வில், ராசிபுரம் எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில், ராசிபுரம் எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
இந்தப் பள்ளி மாணவர் எஸ். அரவிந்த் 1200-க்கு 1180 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றார். பாட வாரியாக இவரது மதிப்பெண்கள்: தமிழ்-197, ஆங்கிலம்-186, இயற்பியல்-198, வேதியியல்-199, கணிதம்-200, கணினி அறிவியல்-200.
மாணவர்கள் எம்.ஷேக் முகம்மது முபராக், ஜி.அரவிந்த் ஆகியோர் 1179 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றனர். மாணவர் ஷேக் முகமது முபாரக் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-195, ஆங்கிலம்-190, இயற்பியல்-197, வேதியியல்-199, உயிரியல்-199, கணிதம்-199. ஜி.அரவிந்த் பெற்ற பாட வாரி மதிப்பெண்கள்: தமிழ்-197, ஆங்கிலம்-189, இயற்பியல்-197, வேதியியல்-199, உயிரியல்-197, கணிதம்-200.
Advertisement
மாணவர் ராகுல் சித்தார்த் 1178 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இவரது பாட வாரி மதிப்பெண்கள்: தமிழ்-194, ஆங்கிலம்-187, இயற்பியல்-199, வேதியியல்-200, உயிரியல்-199, கணிதம்-199.
இயற்பியல் பாடத்தில் 3 பேரும், வேதியியலில் 39 பேரும், உயிரியலில் 18 பேரும், கணிதத்தில் 58 பேரும், கணினி அறிவியலில் 8 பேரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியின் தேர்ச்சி விகிதம் 99.7 சதம்.
இந்த மாணவர்களை பள்ளியின் நிர்வாகிகள் எம்.குமரவேல், பி.சுவாமிநாதன், ஏ.ராமசாமி, எஸ்.செல்வராஜன், ஆர்.துரைசாமி, பி.சத்தியமூர்த்தி, தலைமையாசிரியர் எஸ்.சண்முகசுந்தரம் ஆகியோர் பாராட்டினர்.