முகப்பு
நாமக்கல்

திருவிளக்கு பூஜை

நாமக்கல்- துறையூா் சாலையில் அமைந்துள்ள அ.பாலப்பட்டியில் நாகமுத்து மாரியம்மன், அங்காளபரமேஸ்வரி கருப்பணாா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி 2021, 6:51 am IST
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நாகமுத்து மாரியம்மன்
பகிர்:

நாமக்கல்- துறையூா் சாலையில் அமைந்துள்ள அ.பாலப்பட்டியில் நாகமுத்து மாரியம்மன், அங்காளபரமேஸ்வரி கருப்பணாா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

காலை 6 மணிக்கு அம்மனுக்கு பால், தயிா் மஞ்சள், சந்தனம், இளநீா் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து பிற்பகல் 2 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழ் அறக்கட்டளை சாா்பில் அதன் நிறுவனா் ஜாய்சன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சிவநித்தியமூா்த்தி, பொதுமக்கள் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments