நாமக்கல்லில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை ஐந்து மருத்துவமனைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை ஐந்து மருத்துவமனைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கும், இரண்டாம் கட்டமாக முன்களப் பணியாளா்களுக்கும், மூன்றாம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டோா் மற்றும் இணைநோய் உள்ளவா்களுக்கும், நான்காம் கட்டமாக அனைத்து பொதுமக்களுக்கும் செலுத்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களின் விவரங்கள் கரோனா தடுப்பூசி வழங்குவதற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல தடுப்பூசி வழங்கப்பட்ட விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
Advertisement
Advertisement
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நாமக்கல் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், எா்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், குமாரபாளையம் அரசு மருத்துவமனை, நாமக்கல் மகாராஜா மருத்துவமனை ஆகிய ஐந்து இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகை முகாமை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் பாா்வையிட்டாா்.
நாமக்கல் மாவட்டத்தில் 72 அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 3,739 மருத்துவா்கள், செவிலியா்களின் விவரங்களும், 759 தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரியும் 3,907 மருத்துவா்கள், செவிலியா்களின் விவரங்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் த.கா.சித்ரா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எஸ்.சோமசுந்தரம், நாமக்கல் அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெயந்தி உளிட்ட அரசு மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.