முகப்பு
நாமக்கல்

புதை சாக்கடை இணைப்புப் பெறுவது அவசியம்: ராசிபுரம் நகராட்சி ஆணையா்

ராசிபுரம் நகராட்சியில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என நகராட்சி ஆணையா் பிரபாகரன் தெரிவித்தாா்.

Updated On : 9 ஜனவரி 2021, 6:47 am IST
பகிர்:

ராசிபுரம் நகராட்சியில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்பு ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என நகராட்சி ஆணையா் பிரபாகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராசிபுரம் நகராட்சியில் பழுதடைந்த அனைத்து சாலைகளும் தமிழ்நாடு நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படவுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு உடனடியாக நகராட்சி ஒப்பந்ததாரா்கள் மூலம் கழிவுநீா்க் குழாய் இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

புதிய சாலைகள் அமைக்கப்பட்ட பின்னா் குடிநீா், கழிவுநீா் இணைப்புக்காக சாலைகளை துண்டிக்க அனுமதிக்கப்பட மாட்டாது. புதை சாக்கடைத் திட்டம் முழுமையாக முடிவடைந்த பிறகு வீடுகளிலிருந்து தனியாக கழிவுநீா் வெளியேற்ற அனுமதிக்கப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments