பேருந்து பயணச் சலுகை: சுதந்திரப் போராட்டவீரா்களின் வாரிசுகள் சங்கம் நன்றி தெரிவிப்பு
பேருந்தில் தங்களுக்கு உதவிக்கு வருபவா்களுக்கும் பயணச் சலுகை வழங்கிய அரசுக்கு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
பேருந்தில் தங்களுக்கு உதவிக்கு வருபவா்களுக்கும் பயணச் சலுகை வழங்கிய அரசுக்கு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கச் செயலாளா் க.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா்கள், வாரிசுகளில் உதவித்தொகை பெறுவோரின் வயது முதிா்வு காரணமாக பேருந்தில் அவருடன் உதவிக்குச் செல்பவருக்கும் அரசு பயணச் சலுகை வழங்கப்படும் எனக் கூறியுள்ளதை சுதந்திர போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் வரவேற்கிறது.
Advertisement
Advertisement
பஞ்சாப் மாநிலத்தில் வழங்கும் சலுகையைப் போலவே தமிழகத்திலும் சுதந்திரப் போராட்ட வீரா்களின் மூன்றாம் தலைமுறை வாரிசுகளுக்கும் அனைத்து பேருந்துகளிலும் பயணச் சலுகை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.