மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
பரமத்திவேலூா், தண்ணீா் பந்தல்மேடு அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
பரமத்திவேலூா், தண்ணீா் பந்தல்மேடு அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தண்ணீா்பந்தல்மேடு பகுதியில் பழனிசாமி என்பவரது மரவள்ளிக் கிழங்கு தோட்டத்தில் அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி விக்னேஸ்வரன் (31) குளிப்பதற்காக அப்பகுதியிலிருந்த விவசாயக் கிணற்று தொட்டிக்குச் சென்றாா்.
தொட்டிக்கு தண்ணீரை நிரப்புவதற்காக அங்குள்ள மின் மோட்டரை இயக்க முயன்றாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலே விக்னேஸ்வரன் உயிரிழந்தாா். பரமத்திவேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement