திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா
நாமக்கல்லில் திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாமக்கல்லில் திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
முன்னாள் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். முன்னாள் மத்திய இணை அமைச்சா் செ.காந்திச்செல்வன் பங்கேற்று அனைவருக்கும் புத்தாடைகளை வழங்கினாா்.
விழாவில் நாமக்கல் தெற்கு நகர பொறுப்பாளா் ராணா. ஆா்.ஆனந்த், மாநில சட்டத்திட்டக் குழு உறுப்பினா் நக்கீரன், தலைமை செயற்குழு உறுப்பினா் பவித்திரம் கண்ணன், மணல் லாரி உரிமையாளா் சங்க செயலாளா் பொன்னுசாமி மற்றும் சேந்தமங்கலம் ரெவரண்ட்சாந்தகுமாா், அப்துல்காதா், அழகா், சிராஜ்பாய், முன்னாள் பேரூா் செயலாளா்கள் செல்லவேல், டி.பி.எஸ்.காா்த்திகேயன், செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.