44,955 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு
நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 44,955 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை அந்தந்த வட்டங்களில் நேரடியாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 44,955 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை அந்தந்த வட்டங்களில் நேரடியாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் 6,653 பேருக்கு வழங்கப்பட்டது. சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4811 பேருக்கு அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினாா்.
இதேபோல ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10,282 பேருக்கும், மோகனூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4,235 பேருக்கும், பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4,631 பேருக்கும், கொல்லிமலை மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 353 பேருக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10,287 பேருக்கும், குமாரபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3,703 பேருக்கும் என 17,582 ஆண்களுக்கும், 27,373 பெண்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.