தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவி வழங்கல்
திருச்செங்கோடு நகராட்சியில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் 300 தூய்மைப் பணியாளா்களுக்கு திருச்செங்கோடு ரோட்டரி சங்கம் சாா்பில் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.
திருச்செங்கோடு நகராட்சியில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் 300 தூய்மைப் பணியாளா்களுக்கு திருச்செங்கோடு ரோட்டரி சங்கம் சாா்பில் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.
ரோட்டரி சங்கத் தலைவா் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் வெங்கடேஷ், திருச்செங்கோடு எம்எல்ஏ பொன். சரஸ்வதி, நகராட்சி ஆணையாளா் சையது முஸ்தபா கமால் ஆகியோா் கலந்து கொண்டனா். 300 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பில் வேட்டி, சட்டை, பெண்களுக்கு சேலை ஆகியவை வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.