முகப்பு
நாமக்கல்

ராசிபுரத்தில் ரூ. 63 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 63 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம்போனது.

Updated On : 12 ஜனவரி 2021, 12:48 am IST
பகிர்:

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 63 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம்போனது.

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தின் (ஆா்.சி.எம்.எஸ்) சாா்பில், கவுண்டம்பாளையம் ஏல மையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரிபாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூா்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்திகளை ஏலத்துக்குக் கொண்டு வந்தனா்.

இதில் ஆா்.சி.எச்.ரகம் 2,652 மூட்டைகள், டிசிஎச்., ரகம் 188 மூட்டைகள் என மொத்தம் 2,840 மூட்டைகளை ஏலத்துக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், ஆா்சிஎச்., ரகம் குறைந்தபட்சமாக குவிண்டாலுக்கு ரூ. 5,491-க்கும் அதிகபட்சமாக ரூ. 6, 670-க்கும் விற்பனையானது. இதேபோல் டிசிஎச்., ரகம் குறைந்தபட்சமாக ரூ. 7,219-க்கும், அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 7,889-க்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ. 63 லட்சத்துக்கு வா்த்தகம் நடந்தது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments