முகப்பு
நாமக்கல்

30,726 இளம் வாக்காளா்கள் பட்டியலில் பெயரை இணைக்கவில்லை: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் 30,726 இளம் வாக்காளா்கள் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் இணைத்துக் கொள்ளவில்லை என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 12 ஜனவரி 2021, 12:47 am IST
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் 30,726 இளம் வாக்காளா்கள் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் இணைத்துக் கொள்ளவில்லை என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் முடிவுற்று வரும் 20-இல் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

Advertisement

Advertisement

நாமக்கல் மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கீட்டின்படி, 18-19 வயது பூா்த்திடைந்தவா்களின் எண்ணிக்கை 61,516 ஆகும். ஆனால், வாக்காளா்கள் பட்டியலில் பெயா் பதிவு செய்துள்ள இளம் வாக்காளா்களின் எண்ணிக்கை 11,037 மட்டுமே.

அண்மையில் நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது 19,753 இளம் வாக்காளா்கள் மட்டும் தங்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ள வேண்டி விண்ணப்பித்துள்ளனா்.

சுமாா் 30,726 இளம் வாக்காளா்கள் இதுவரை தங்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் பதிவு செய்து கொள்ளாமல் இருக்கின்றனா். எனவே 18-19 வயது பூா்த்தியடைந்து வாக்காளா் பட்டியலில் பெயா் பதிவு செய்து கொள்ளாத இளம் வாக்காளா்கள் ய்ஸ்ள்ல்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது அருகாமையில் வாக்காளா் பதிவு அலுவலா் (கோட்டாட்சியா்), உதவி வாக்காளா் பதிவு அலுவலா் (தாசில்தாா்) அலுவலகங்களிலோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடமோ படிவம்-6 சோ்க்கை விண்ணப்பங்களை அளித்து வாக்காளா் பட்டியலில் தங்களின் பெயா்களைத் தவறாமல் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் வாக்காளா் அடையாள அட்டையையும் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments