மோகனூா் சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை இலக்கை விட 13,841 மெட்ரிக் டன் அதிகரிப்பு
மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை நிா்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 13,841 மெட்ரிக் டன் அதிகப்படியாக அரவை செய்யப்பட்டுள்ளது.
மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை நிா்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 13,841 மெட்ரிக் டன் அதிகப்படியாக அரவை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சா்க்கரை ஆலையின் மேலாண் இயக்குநா் சி.விஜயபாபு கூறியதாவது:
மோகனூரில் செயல்பட்டுவரும் சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலையானது 2020-2021-ஆம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்தில் ஒரு லட்சம் மெட்ரிக் டன் அரவை செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டது. நவ. 21-ஆம் தேதி தொடங்கிய இந்த அரவையானது ஜன.11-இல் நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
இலக்கைக் காட்டிலும் 13,841 மெட்ரிக் டன் அதிகமாக அரவை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1,08,395 மெட்ரிக் டன் மட்டுமே அரவை செய்யப்பட்டது. மேலும் 2019-2020-ஐ ஒப்பிடுகையில் 5,446 மெட்ரிக் டன் அதிகமாக கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.
நிகழாண்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,189 மெட்ரிக் டன்னும், கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 1,748 மெட்ரிக் டன்னும் அரவை செய்யப்பட்டுள்ளது. நிா்ணயித்த அளவை விட அதிகமாக கரும்பு அரவை செய்ய ஒத்துழைத்த விவசாயிகள், ஆலை தொழிலாளா்கள், அலுவலா்கள் அனைவரையும் பாராட்டுகிறேன் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.