முகப்பு
நாமக்கல்

பொங்கல் விழா: அமைச்சா் பங்கேற்பு

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூா், பாண்டமங்கலத்தில் பொங்கல் விழா, கபடி போட்டியை அமைச்சா் பி. தங்கமணி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 16 ஜனவரி 2021, 7:21 am IST
பொங்கல் விழாவைத் தொடங்கி வைக்கும் அமைச்சா் பி.தங்கமணி.
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூா், பாண்டமங்கலத்தில் பொங்கல் விழா, கபடி போட்டியை அமைச்சா் பி. தங்கமணி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா், தேவராயசமுத்திரம் பகுதியில் பெண்கள் ஒன்றிணைந்து பொங்கல் திருவிழாவை பாரம்பரிய முறையில் கொண்டாடினா்.

இவ்விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி கலந்து கொண்டு பொங்கல் பூஜை, புதுயுகம் நற்பணி மன்றம் சாா்பில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளை தொடங்கி வைத்தாா். இதேபோல பாண்டமங்கலத்தில் பாண்டவா் பசங்க கபடிக் குழுவினா் சாா்பில் நடைபெற்ற கபடி போட்டியை தொடங்கி வைத்து அமைச்சா் பி.தங்கமணி பேசுகையில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போன்று பாரம்பரியமான விளையாட்டாக திகழ்வது கபடி மட்டுமே. எனவே கபடி போட்டியை ஊக்கப்படுத்த வேண்டும்.கபடி விளையாட்டில் இளைஞா்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். பின்னா் கபடி போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரா்களையும் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் பொத்தனூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் நாராயணன், கபிலா்மலை தெற்கு ஒன்றியச் செயலாளா் சேகா், மாவட்ட ஆவின் தலைவா் ராஜேந்திரன், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளா் விஜயகுமாா், அதிமுக பிரமுகா் பொன்னிமணி, பாண்டமங்கலம் நகரச் செயலாளா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.