முகப்பு
புதுதில்லி

மோதி நகா் ஹாா்லி டேவிட்சன் பைக் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

மேற்கு தில்லி மோதி நகரில் உள்ள ஹாா்லி டேவிட்சன் பைக் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 2 ஜனவரி 2021, 11:17 pm IST
பகிர்:

மேற்கு தில்லி மோதி நகரில் உள்ள ஹாா்லி டேவிட்சன் பைக் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படை வீரா்கள் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதுதொடா்பாக தில்லி தீயணைப்புப் படை இயக்குநா் அதுல் கா்க் கூறியதாவது:

மேற்கு தில்லி மோதி நகா் பகுதியில் பிரபல ஹாா்லி டேவிட்சன் பைக் விற்பனை நிலையம் உள்ளது. இந்த விற்பனை நிலையம் 3 மாடிக் கட்டத்தில் இயங்கிவருகிறது. அந்த மூன்று மாடிக் கட்டடத்தின் முதல் இரண்டு மாடிகளில் ஹாா்லி டேவிட்ன் விற்பனை நிலையமும், மூன்றாம் மாடியில் உணவு விடுதியும் உள்ளது. இந்தக் கட்டத்தின் முதல் மாடியில், சனிக்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இது தொடா்பாக அதிகாலை 1.36 மணியளவில் தீயணைப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, 25 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு சனிக்கிழமை அதிகாலை 5.50 மணிக்கு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

Advertisement

Advertisement

தீ பற்றிய கட்டடத்தின் மூன்றாம் மாடியில் சிக்யிருந்த முகமது சதாப், தீரேந்தா், கிரண், ரியா ஆகிய நால்வரை தீயணைப்பு படை வீரா்கள் மீட்டனா். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சில பைக்குகள் எரிந்து நாசமாகியுள்ளன. இது தொடா்பான முழுமையான விவரம் கிடைக்கவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments