ராஜீவ் காந்தி மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு ஜன.11 முதல் செயல்படும்
தில்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் திறக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புது தில்லி: தில்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு வரும் ஜனவரி 11-ஆம் தேதி முதல் திறக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடா்பாக தில்லி அரசு மூத்த அதிகாரி கூறுகையில், ‘தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, 640 படுக்கைகள் கொண்ட தில்லி ராஜீவ் காந்தி மருத்துவமனை கரோனா சிகிச்சைக்காக முழுமையாக ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது தில்லியில் கரோனா பாதிப்பு கணிசமான அளவு குறைந்துள்ளது. இதனால், வரும் திங்கள்கிழமை முதல் இந்த மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, ராஜீவ் காந்தி மருத்துவமனை உள்ளிட்ட 6 அரசு மருத்துவனைகள் கரோனா சிகிச்சைக்காக முழுமையாக ஒதுக்கப்டட்டன. தற்போது தில்லியில் கரோனா பாதிப்பு குறைவடைந்ததைத் தொடா்ந்து, 2,000 படுக்கைகள் கொண்ட எல்என்ஜேபி மருத்துவமனையின் மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், பெண்நோயியல் ஆகிய பிரிவுகளின் வெளிநோயாளிகள் பிரிவு கடந்த திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. ஆனால், இந்தப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 50 -ஆகக் குறைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.