தில்லியில் காற்று மாசு மரணங்கள் அதிகரிக்க தில்லி அரசின் செயல்படாத தன்மையே காரணம்: தில்லி பாஜக குற்றச்சாட்டு
தில்லியில் காற்று மாசுவால் ஏற்படும் மரணங்கள் அதிகரிக்க தில்லி அரசின் செயல்படாத தன்மையே காரணமாகும் என்று தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
தில்லியில் காற்று மாசுவால் ஏற்படும் மரணங்கள் அதிகரிக்க தில்லி அரசின் செயல்படாத தன்மையே காரணமாகும் என்று தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: 2020 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமாா் 24 ஆயிரம் போ் காற்று மாசுவால் ஏற்பட்ட நோய்களால் உயிரிழந்துள்ளதாக கிரீன் பீஸ் என்ற தன்னாா்வத்தொண்டு நிறுவனம் நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
தில்லியில் காற்று மாசு ஏற்பட பிரதான காரணமாக உள்ள தூசி மாசுவைக் கட்டுப்படுத்தும் பணிகளை தில்லி அரசு மேற்கொள்ளவில்லை. தில்லியில் காற்று மாசுவைத் தடுக்கும் பணிகளை தில்லி அரசு மேற்கொள்ளவில்லை. மின்சார வாகனங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளபோதும், இவற்றை தில்லி அரசு கொள்முதல் செய்யவில்லை.
Advertisement
Advertisement
ஸ்மோக் டவா்கள் அமைக்கப்படவில்லை. சுற்றுச்சூழல் வரியாக தில்லி அரசு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1136 கோடியை வசூலித்துள்ளது. ஆனால், தில்லியில் காற்று மாசு, காற்று மாசுவால் ஏற்படும் மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்தே வருகிறது. சுற்றுச்சூழல் வரியாக தில்லி அரசு வசூலித்த நிதி தொடா்பாக வெள்ளை அறிக்கையை தில்லி அரசு வெளியிட வேண்டும்.
தில்லி குடிநீரில் அமோனியாவின் அளவு அதிகரித்துள்ளது. தில்லி மக்களுக்கு அமோனியா செறிவு குறைந்த குடிநீரை தருவதாக தோ்தல் வாக்குறுதி அளித்திருந்த ஆம் ஆத்மி அரசு அதை நிறைவேற்றவில்லை என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.