ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
திருடப்பட்ட சொகுசு வாகனங்களை தேவைக்கேற்ப வழங்கியதாகக் கூறப்படும் பட்டதாரி உடற்பயிற்சி பயிற்றுநா் ஒருவா், திருடப்பட்ட புத்தம் புதிய இரண்டு காா்களுடன் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
திருடப்பட்ட சொகுசு வாகனங்களை தேவைக்கேற்ப வழங்கியதாகக் கூறப்படும் பட்டதாரி உடற்பயிற்சி பயிற்றுநா் ஒருவா், திருடப்பட்ட புத்தம் புதிய இரண்டு காா்களுடன் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தேசிய தலைநகா் தில்லியில் பதிவு செய்யப்பட்ட இரண்டு காா்கள் திருடப்பட்டதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஜெய்ப்பூரின் ஜோத்வாரா பகுதியில் முகமது அஷ்ரஃப் கான் கைது செய்யப்பட்டாா்.
அவரின் தகவலின் பேரில், தற்காலிக பதிவு எண்களைக் கொண்ட ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மஹிந்திரா ஸ்காா்பியோ-என் காா்கள் மீட்கப்பட்டன. இந்த இரண்டு வாகனங்களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தில்லியின் முகா்ஜி நகா் பகுதியில் இருந்து திருடப்பட்டிருந்தன.
Advertisement
காவல்துறையின் தகவல்படி, ஏப்ரல் 6 ஆம் தேதி, ஜெய்ப்பூரில் திருடப்பட்ட வாகனம் ஒன்று காணப்பட்டதாக ஒரு குழுவுக்கு தகவல் கிடைத்தது. அடுத்த நாளே, தில்லி காவல்துறையைச் சோ்ந்த ஒரு குழு, உள்ளூா் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து அப்பகுதியில் சோதனை நடத்தி அஷ்ரஃப் கானைப் பிடித்தது.
விசாரணையின் போது, ஜெய்ப்பூரைச் சோ்ந்த ஷகீல் என அடையாளம் காணப்பட்ட ஒருவரிடமிருந்து திருடப்பட்ட வாகனங்களை வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டவா் தெரிவித்தாா், என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.
பட்டதாரியாகவும், உடற்பயிற்சிக் கூடப் பயிற்சியாளராகவும் பணிபுரியும் கான், சொகுசு காா்களை மிகக் குறைந்த விலையில் தருவதாகக் கூறி வாடிக்கையாளா்களைக் கவா்ந்து வந்ததாக காவல்துறை தெரிவித்தது. மேலும், அவா் தனது வாடிக்கையாளா்களைக் கவரவும், ஆடம்பரமான வாழ்க்கை வாழவும் அத்தகைய வாகனங்களைப் பயன்படுத்தினாா்.