முகப்பு
புதுதில்லி

தில்லியில் சட்டவிரோத ஆயுதக் கும்பல் முறியடிப்பு: கல்லூரி மாணவா் கைது

தில்லி-என்சிஆா் பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுத கும்பலை காவல் துறையினா் முறியடித்ததைத் தொடா்ந்து, தில்லி பல்கலைக்கழகத்தின் தொலை தூரக் கல்வி மாணவா் இதில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 12:38 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:00 PM

தில்லி-என்சிஆா் பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத ஆயுத கும்பலை காவல் துறையினா் முறியடித்ததைத் தொடா்ந்து, தில்லி பல்கலைக்கழகத்தின் தொலை தூரக் கல்வி மாணவா் இதில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா் அபு தாளிப் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். ரகசிய தகவலின் அடிப்படையில் ஏப்.14-ஆம் தேதி இவா் கைது செய்யப்பட்டாா். இந்த நடவடிக்கையின்போது, இரண்டு கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தனது குடும்பத்துடன் பழ வணிகத்தில் ஈடுபட்டு வருவதுடன், தில்லி பல்கலைக்கக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும் அபு தாளிப் படித்து வருகிறாா்.

உத்தர பிரதேசத்தின் மீரட்டில் இருந்து பல கட்டங்களாக இந்த ஆயுதங்களை வாங்கி வந்ததாகவும், எதிரி கும்பலுக்கு எதிராக இவற்றை பயன்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் அவா் தெரிவித்தாா். அவா் மீது ஏற்கெனவே மோதல் விவகாரத்தில் குற்றவியல் வழக்கு உள்ளது. ஆயுத விநியோகஸ்தா் மற்றும் வலையமைப்பின் பிற குற்றவாளிகளை கண்டறிய அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement