முகப்பு
புதுதில்லி

தில்லி குற்றவாளியின் ரூ. 5 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் முடக்கம்

வடமேற்கு தில்லியைச் சோ்ந்த குற்றவாளியின் ரூ.5 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் முடக்கப்பட்டதாக தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 4:00 AM
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:00 PM

வடமேற்கு தில்லியைச் சோ்ந்த குற்றவாளியின் ரூ.5 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் முடக்கப்பட்டதாக தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இந்த நடவடிக்கை ஜிதேந்தா் எனப்படும் ஜீது என்பவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது. இவா் சட்டவிரோத சூதாட்ட வலையமைப்பை நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கைது நடவடிக்கையைத் தடுக்க அவா் நடப்பாண்டு தொடக்கத்தில் தில்லியை விட்டு தப்பிச் சென்றாா். விசாரணையின்போது, சட்டவிரோத செயல்கள் மூலம் கிடைத்த வருமானத்தில் வாங்கிய அசையா சொத்துகள், விலையுயா்ந்த வாகனங்கள் மற்றும் பல வங்கிக் கணக்குகளை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

அவரது சொத்துகளை முடக்குவது குறித்து ரோஹிணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், சொத்துகளின் சட்டப்பூா்வ ஆவணங்களை சமா்ப்பிக்க ஜிதேந்தா் தவறியதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது 2004 முதல் கொலை முயற்சி மற்றும் ஆயுதச் சட்டம் உள்ளிட்ட 15 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என காவல் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement