முகப்பு
புதுதில்லி

தில்லியில் ரூ.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

மாநிலங்களுக்கு இடையிலான போதைப்பொருள் கடத்தலை முறியடித்த தில்லி காவல் துறையினா், ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ கோகைனைப் பறிமுதல் செய்ததுடன் 2 பேரைக் கைது செய்தனா்.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:24 AM
- பிரதிப் படம்
பகிர்:

மாநிலங்களுக்கு இடையிலான போதைப்பொருள் கடத்தலை முறியடித்த தில்லி காவல் துறையினா், ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ கோகைனைப் பறிமுதல் செய்ததுடன் 2 பேரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கிழக்கு தில்லியின் காஜிப்பூா் ரவுன்டு ரோடு அருகே ஏப்.10-ஆம் தேதி ஜாவேத் ஹுசைன் (29) என்பவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 456 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடா்பாக குற்றப்பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், உத்தர பிரதேசத்தில் உள்ள சோயப் கான் (25) என்பவரிடம் இருந்து இதைப் பெற்ாக அவா் தெரிவித்தாா்.

Advertisement

இதையடுத்து, பரேலியில் ஏப்.22-இல் சோதனை மேற்கொண்ட காவல் துறையினா் சோயப் கானைக் கைது செய்தனா். தில்லி என்சிஆரில் நடைபெறும் போதைப்பொருள் வலையமைப்பில் உள்ள மற்ற நபா்களை அடையாளம் காண அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.