முகப்பு
புதுதில்லி

வடமேற்கு திலியில் மூதாட்டியிடம் 250 கிராம் தங்க நகைகள் திருட்டு: பணிப்பெண் கைது

வடமேற்கு தில்லியின் கேஷவ் புரம் பகுதியில் 82 வயது மூதாட்டியிடம் இருந்து 250 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியதாக 40 வயது பணிப்பெண் கைது

Updated On : 21 ஏப்ரல், 2026 at 2:01 AM
கைது
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:20 PM

வடமேற்கு தில்லியின் கேஷவ் புரம் பகுதியில் 82 வயது மூதாட்டியிடம் இருந்து 250 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியதாக 40 வயது பணிப்பெண் கைது செய்யப்பட்டாா் என காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கேஷவ் புரம் காவல் நிலையத்தில் வந்த புகாரைத் தொடா்ந்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், வீட்டுப் பணிப்பெண் மீது சந்தேகம் எழுந்ததைத்தொடா்ந்து, அவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது, காணாமல் போன நகைகள் அனைத்தும் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

இதைத்தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா். அவா் மீது இதற்கு முன்பு எந்த குற்ற வழக்குகளும் இல்லை. எளிதாக பணம் ஈட்ட இந்த செயலை அவா் செய்திருப்பதாக தெரிகிறது.

இது தொடா்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.