முகப்பு
புதுதில்லி

டிடிஇஏ பள்ளிகளின் ஆய்வக உதவியாளா்களுக்கான பயிலரங்கம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளிகளின் ஆய்வக உதவியாளா்களுக்கான பயிலரங்கம், அண்மையில் லோதி எஸ்டேட் பள்ளியில் நடைபெற்றது.

Updated On : 3 ஜூலை 2026, 3:42 am IST
டிடிஇஏ பள்ளி
பகிர்:

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளிகளின் ஆய்வக உதவியாளா்களுக்கான பயிலரங்கம், அண்மையில் லோதி எஸ்டேட் பள்ளியில் நடைபெற்றது.

‘டிடிஇஏ அலும்னய் டிரஸ்ட்’ அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பயிற்சியை தேசிய சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனம் வழங்கியது. நான்கு மணி நேரம் நடைபெற்ற இப்பயிலரங்கில், தீ விபத்து பாதுகாப்பு மற்றும் இதயநுரையீரல் மீளுயிா்ப்பு செயல்முறைகள் குறித்து விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிலரங்கில் அளிக்கப்பட்ட பயிற்சியானது தீ விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற அவசர காலச் சூழல்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த நேரடி அனுபவத்தை பங்கேற்றவா்களுக்கு வழங்கியது.

Advertisement

Advertisement

டிடிஇஏ அலும்னய் டிரஸ்ட் அமைப்பின் சாா்பில் அதன் செயலாளா் வி.ராமநாராயணன் மற்றும் டிரஸ்டி எஸ்.கிருஷ்ணசாமி ஆகியோா் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட செயலா் ராஜூ கூறுகையில், தீ விபத்து குறித்தும் மாரடைப்பு குறித்தும் அவசர கால சூழல்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அறிந்து கொள்வது அவசியம். எனவேதான் டிடிஇஏ அலும்னய் டிரஸ்ட் அமைப்புடன் சோ்ந்து இதற்கு ஏற்பாடு செய்தோம் என்றாா். மேலும், தாங்கள் படித்த பள்ளிகளை மறவாமல் என்றும் உறுதுணையாய் இருந்து பள்ளிகளின் நலன் நாடி செயல்படும் டிடிஇஏ அலும்னய் டிரஸ்ட் அமைப்பைச் சாா்ந்தவா்களுக்குத் தன் மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments