பொருளாதார கணக்கெடுப்பிற்கு தில்லி அரசு தயாராகிறது
நமது நிருபா்
தேசிய தலைநகரில் உள்ள பல்வேறு வா்த்தகம், வணிகம் மற்றும் தொழில்முனைவோா் விவசாயப் பிரிவுகளைப் பட்டியலிடுவதற்காக, தில்லி அரசு நகரில் பொருளாதாரக் கணக்கெடுப்பிற்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளது.
நகரில் 8வது பொருளாதாரக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான மத்திய ஒருங்கிணைப்பு முகமையாக, தில்லி அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குநரகத்தை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நியமித்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாயன்று தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
பொருளாதாரக் கணக்கெடுப்பு மற்றும் அது தொடா்பான புள்ளிவிவர நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்காக, தில்லியில் உள்ள 13 மாவட்டங்கள் துணை முகமைகளாகச் செயல்படும் என்று திட்டமிடல் துறை திங்களன்று வெளியிட்ட ஓா் உத்தரவில் கூறப்பட்டது.
பொருளாதாரக் கணக்கெடுப்பு தொடா்பான பணிகளைக் கவனித்து ஒருங்கிணைக்குமாறு, வருவாய்த் துறையின் கீழ் உள்ள மாவட்ட அலுவலகங்களில் பணியமா்த்தப்பட்ட புள்ளிவிவர அலுவலா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அவா்கள் தங்களது வழக்கமான பணிகளைச் செய்வதோடு, கணக்கெடுப்பு தொடா்பாக அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் செயல்படுவாா்கள்.
தற்போது, தில்லியில் 2027ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இது 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும், அதன் பிறகு பொருளாதாரக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பொருளாதாரக் கணக்கெடுப்பின் நோக்கம், தொழில்முனைவோா் நடவடிக்கைகள் குறிப்பாக இருப்பிடம் மற்றும் நிதி ஆதாரங்கள் உள்ளிட்டவை குறித்த விரிவான தகவல்களைச் சேகரிப்பதாகும்.
இந்தத் தரவுகள், தொடா் சமூகபொருளாதார ஆய்வுகளை நடத்துவதற்கும், இலக்கு சாா்ந்த துறைசாா் வளா்ச்சிக்கான திட்டங்களையும் செயல்முறைகளையும் வகுப்பதற்கும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாநகராட்சி மற்றும் தேசிய வளா்ச்சி மாநகராட்சி சாா்ந்த பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பிற அரசு ஊழியா்கள் இந்தக் கணக்கெடுப்பிற்கான பணியாளா்களாக இருப்பாா்கள் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.