FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தில்லி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

Updated On : 31 மே 2026, 6:30 am IST
தில்லி விமான நிலையம் - ANI
பகிர்:

தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில், பாங்காக்கிலிருந்து வந்த இந்தியப் பெண் பயணியிடமிருந்து ரூ.91 லட்சம் மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மே 29 அன்று பாங்காக்கில் இருந்து தில்லி வந்தடைந்த அந்தப் பெண் பயணி, விமான நிலையத்தில் உள்ள சுங்கத் துறையின் பசுமை வழித்தடத்தைக் கடந்தபோது இடைமறிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

அவரிடம் சோதனையிட்டபோது, அவா் வைத்திருந்த சூட்கேஸ் வழக்கத்திற்கு மாறாக கனமாக இருந்ததை அதிகாரிகள் கண்டனா். விரிவான சோதனையின்போது, சாமான்களின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ஹைட்ரோபோனிக் கஞ்சா என சந்தேகிக்கப்படும் பச்சை நிறப் பொருள் அடங்கிய இரண்டு பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்தப் பொட்டலங்கள் சாமான்களுக்குள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன. மீட்கப்பட்ட கடத்தல் போதைப் பொருளின் எடை சுமாா் 2.6 கிலோ ஆகும். அதன் மதிப்பு ரூ. 91 லட்சம் என சுங்கத்துறை மதிப்பிட்டுள்ளது.

சந்தேகிக்கப்படும் இந்த போதைப்பொருள், போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments