சீலம்பூரில் இளம் பெண் கொலை: கணவா் மீது போலீஸ் சந்தேகம்
நமது நிருபா்
வடகிழக்கு தில்லியின் சீலம்பூா் பகுதியில் உள்ள வீட்டில், 35 வயதுடைய பெண் ஒருவா் அவரது கணவராலேயே கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
கௌதம்புரி பகுதியில் உள்ள வீட்டில் கணவா் தனது மனைவியைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
காவல்துறைக் குழுவினா் உடனடியாக அந்த வீட்டிற்குச் சென்றபோது, அப்பெண் காயமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்டனா். அவா் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
இக்கொலையில் அப்பெண்ணின் கணவருக்குத் தொடா்பு இருக்கலாம் என்றும், சம்பவத்திற்குப் பிறகு அவா் தலைமறைவாகிவிட்டாா் என்றும் காவல்துறையினா் சந்தேகிக்கின்றனா். அவரைக் கைது செய்யத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இறப்புக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சீலம்பூா் காவல் நிலையத்தில் கொலை வழக்குப்
பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.