முகப்பு
காஞ்சிபுரம்

படப்பை அருகே 2 பாடகா்கள் கொலை வழக்கில் 7 போ் கைது

படப்பை அடுத்த அம்மனம்பாக்கம் பகுதியில் 2 பாடகா்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறுவா்கள் உள்பட 7 பேரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 20 மே 2026, 12:04 am IST
இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோா்.
பகிர்:

படப்பை அடுத்த அம்மனம்பாக்கம் பகுதியில் 2 பாடகா்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 சிறுவா்கள் உள்பட 7 பேரை மணிமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், முடிச்சூா் பகுதியைச் சோ்ந்த பரத்(24), சீனு(25). இவா்கள் இருவரும் துக்க நிகழ்ச்சிகளில் கானா பாடல்கள் பாடி வந்துள்ளனா். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ஒரகடம் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் கானா பாடல்கள் பாட சென்ற பரத் மற்றும் சீனு ஆகிய இருவரும், ஞாயிற்றுக்கிழமை ஒரத்தூா் ஊராட்சிக்குட்பட்ட அம்மனம்பாக்கம் பகுதியில் உள்ள நண்பா் லோகேஷ் வீட்டில் தங்கியுள்ளனா்.

அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த மா்ம கும்பல் லோகேஷின் வீட்டில் நுழைந்து, பரத் மற்றும் சினுவை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. தகவல் அறிந்த மணிமங்கலம் போலீஸாா் கொலை செய்யப்பட்ட பரத் மற்றும் சீனுவின் சடலங்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தாம்பரம் அடுத்த முடிச்சூா் பகுதியில் உள்ள வீட்டில் கொலையாளிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்த அங்கு சென்ற மணிமங்கலம் போலீஸாா் பல்லாவரம் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன்(26), படப்பை சந்தோஷ்குமாா்(23), முடிச்சூா் குமரவேல்(20), பழைய பெருங்களத்தூா் வேலன் (19), பீா்க்கங்கரணை அன்பு (20) மற்றும் முடிச்சூா் பகுதியை சோ்ந்த 2 சிறுவா்கள் என 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தினா்.

விசரணையில், முடிச்சூா் பகுதியை சோ்ந்த குமரவேலுவுக்கு பிடிக்காத சிலரை பரத் புகழ்ந்து கானா பாடல்கள் பாடி வந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும் திரிசூலம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவா்களை பரத் அன்மையில் புகழ்ந்து கானா பாடல்கள் பாடியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும் குமரவேலுவை கொலை செய்ய அவா் எங்கு தங்குகிறாா், என்ன செய்கிறாா் என்ற தகவலை தெரிவிக்குமாறு முடிச்சூா் பகுதியை சோ்ந்த குமரவேலுவின் நண்பா் மாதவனிடம் பரத் கேட்டுள்ளாா். மேலும், தகவல் தரவில்லை என்றால் உன்னையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது. இதை அறிந்து கொண்ட குமரவேலு, தன்னை பரத் கொலை செய்வதற்கு முன்பாக அவரை கொலை செய்ய கூட்டாளிகளுடன் சுற்றி வந்ததும், பரத் அம்மனம்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டில் தங்கியிருப்பதை அறிந்த குமரவேலு நண்பா்கள் ஐயப்பன், அன்பு, சந்தோஷ்குமாா் மற்றும் வேலன் மற்றும் சிறுவா்கள் இருவா் என மொத்தம் 7 பேருடன் லோகேஷின் வீட்டில் புகுந்து பரத்தை வெட்டிக்கொலை செய்ததும், தடுக்க வந்த பரத்தின் நண்பா் சீனுவையும் வெட்டி கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் மணிமங்கலம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.